tamilnadu

img

இந்து மதத்திலிருந்து அனுபவித்த கொடுமை போதும்.... உ.பி.யில் பவுத்தத்தை தழுவிய ‘வால்மீகி’ பிரிவு தலித்துக்கள்...

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், வால்மீகி பிரிவைச் சேர்ந்த தலித்துக்கள் 236 பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறி, பவுத்த சமயத்தைத் தழுவியுள்ளனர்.

ஹத்ராஸ் தலித் இளம்பெண் பாலியல் வன்கொலைசம்பவமும் அதனை மாநில அரசு கையாண்ட விதமும் தங்களை இந்த முடிவுக்கு மாற்றியதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.உயர் சாதி இந்துக்கள் தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; மாநிலத்தை ஆளும் யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் மீதும்தங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது என்று அவர்கள் குறிப் பிட்டுள்ளனர்.காஸியாபாத்தில் உள்ள கரேரா கிராமத்தைச் சேர்ந்தஇவர்கள், கடந்த அக்டோபர்14 அன்று பவுத்தம் தழுவியுள்ளனர். இந்த நாள் குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப் படுகிறது. ஏனெனில் 64 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான், டாக்டர் அம்பேத்கார் 3 லட்சத்து 65 ஆயிரம் தலித்மக்களுடன் பவுத்த மதத்தைத் தழுவினார்.இந்து மதத்திலிருந்து வெளியேறும்வரை, சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுதான்அன்றைய தினம் அம்பேத்கரின் பவுத்தம் தழுவுதலுக்குக் காரணம். இன்றும் அதே காரணத்திற்காகவே கரேரா கிராமத்தைச் சேர்ந்த தாங்கள் 236 பேரும் பவுத்தத்தைத் தழுவியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

தங்களின் கரேரா கிராமத்தில் உயர்சாதி இந்துக் களான சவுகான்கள் 5 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் வகிப்பதாகவும், தாங்கள் 2 ஆயிரம் பேர் இருப்பதாகவும் கூறும் அவர்கள்,தங்களின் கிராமத்தில் கடுமையான சாதிய ஒடுக்குமுறை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.