tamilnadu

img

ஜேஎன்யு -வில் இன்று தேர்தல்

புதுதில்லி:
இந்தியாவின் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் முதன்மையானதும் இடதுசாரி சிந்தனை கொண்ட முற்போக்கு எண்ணம் கொண்ட மாணவர்கள் அதிகம் பயிலும் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மத்திய பாஜக அரசின் முதல் 5 ஆண்டுகால ஆட்சியில் நாடு முழுவதும் கவனம் பெற்றது. மதவெறி சக்திகளின் தலை யீட்டை ஜவஹர்லால் நேருபல்கலைக்கழக மாணவ,மாணவியர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். கருத்துச் சுதந்திரமும் பன்முகத்தன்மையும் இந்தப் பல்கலைக்கழகத்தை இன்றளவும் தாங்கியிருக்கின்றன.இங்கு 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சங்கத்தேர்தல் செப்டம்பர் 6 ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

;