வாரணாசி:
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கங்கை நதி ஓரத்தில்ராஜ்காட் பாலம் அருகே தீன தயாள்உபாத்யாய சிலை அமைக்கப் பட்டுள்ளது. சுமார் 63 அடி உயரமுள்ள இந்த சிலையை சுமார் 6 மாதத்திற்குமுன்பு பிரதமர் மோடி திறந்துவைத்தார்.இதையொட்டி சிலை திறப்புக்கு இரண்டு நாள் முன்னதாக, சுற்றுப்புறங்களை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில், தீனதயாள் உபாத்யாய சிலைக்கு சுமார் 150 மீட்டர் தூரத்தில், ஏழை மக்கள் வசித்து வந்த குடிசைகள் புல்டோசரால் இடிக்கப்பட்டன.
இந்த குடிசைவாழ் மக்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வந்த நிலையில், தங்களின் வீடுகள் இடிக்கப்படுவதற்கு ஆரம்பத்திலேயே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால், சிலைத்திறப்பு விழாமுடிந்து 3 நாட்களுக்குப் பிறகுமீண்டும் குடியேறிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் சமாதானப் படுத்தியுள்ளனர். ஆனால் காரியம் முடிந்ததும், வழக்கம்போல அந்த ஏழை மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். இவர்களுக்குரேசன் கார்டு, ஆதார் கார்டு எல்லாம்இருந்தும் அரசு நிலத்தில் குடியேறு வதற்கு அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.வீடிழந்தவர்கள் இப்பகுதி ஆளும்கட்சி தலைவரைச் சந்தித்து உதவி கேட்டுள்ளனர். அப்போது, இதுபிரபலங்கள் வசிக்கும் பகுதியாகி விட்டதால் இந்த பகுதியில் நீங்கள் வசிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், கண்ணீரும் கம்பலையுமாக வாரணாசி குடிசைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.தற்போது அவர்கள், நடைபாதை மற்றும் கோவில்களில் வசித்து வருகின்றனர். சிலர் பிளாஸ்டிக் தகடுகள் மற்றும் போர்டுகளைக் கொண்டு கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர். இங்கு வசிக்கும் பெண்கள் தாங்கள் குளிப்பதற்கும் கழிவறைக்காகவும் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளதாகவும், குடிநீருக்குக் கூட அலைய வேண்டியது உள்ளது என்று வீடிழந்த 250 பேர் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே, குடிசைகள் இருந்த இடங்களில் தற்போது லாரிகள்மற்றும் உள்ளூர் வணிகர்கள் தங்கள்பொருட்களைச் சேமித்து வைப்பதற்காக மணல் மூலம் மேடுபடுத்தியுள்ளனர்.