tamilnadu

img

மும்பை கட்டிட விபத்து - 9 பேர் பலி

மும்பையில் அடுக்கு மாடி கட்டிடத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்  மலாட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஒருவர் பலியானார்.  ஐந்து பேர் காயம் அடைந்தனர்.  சம்பவ பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.  இதனால் இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
பானுஷாலி என்ற கட்டிடம் நேற்று கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது.  இதில் கட்டிடத்தில் இருந்த பலர் சிக்கி கொண்டனர்.  அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர்.மீட்பு குழுவினர் மீட்பு பணியை இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் பானுஷாலி கட்டிட விபத்தில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.  இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.