tamilnadu

img

ஊரடங்கு நீட்டிப்பு வெங்கய்யா நாயுடு சூசகம்

புதுதில்லி, ஏப்.7- கொரோனா வைரஸ் நாட்டில் கடும் ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக  மேற்கொண்டு வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.   இந்த நிலையில், ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பின்பும் ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும்.  அதை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது எனத் தெரிகிறது. இதற்கிடையில் ஊரடங்கை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக புதுதில்லியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியதாக பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளிதழ் தெரிவித்துள்ளது.