ஸ்ரீநகர், செப். 16 - காஷ்மீரின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிப்பது ஆப்பிள் விவசாயமாகும். இது தற்போதைய பதற்றம் மிகுந்த சூழலில் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. தற்போது ஆப்பிள் அறுவடைக் காலம்.கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் ஆப்பிள் விற்பனை இல்லை. வியாபாரிகளால் மற்ற மாநி லங்களுக்குக் கொண்டுசெல்லவும் முடிய வில்லை. ஆப்பிள் பறிக்கும் பணிக்குக் கூட்ட மாகச் சென்றால் ஊரடங்கு உத்தரவு என்ற பெய ரால் பாதுகாப்பு அதிகாரிகளும், வியாபாரமோ, ஆப்பிள் பறிப்பதோ கூடாது என்று தீவிரவாதி களும் அச்சுறுத்துகிறார்கள். காஷ்மீரின் பொரு ளாதாரக் கட்டமைப்பையே சீர்குலைப்பது இதன் நோக்கமாகவும் இருக்கலாம் என்றுகூடச் சந்தேகிக்கிற விதத்தில் நடவடிக்கைகள் உள்ளன என்று வியாபாரிகளும் ஆப்பிள் தோட்ட உரிமையாளர்களும் கூறுகிறார்கள் என்று ‘தி க்வின்ட்’ ஊடகச் செய்தி கூறுகிறது.
காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சியில் 10 சத வீதம் ஆப்பிள் விவசாயத்தின் பங்களிப்பாகும். இதன் மூலமான விற்று வரவு 1200 கோடி ரூபாய். இங்கு ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் மெட்ரிக் டன் ஆப்பிள் உற்பத்தி செய்யப்படுகிறது. 30 லட்சம் மக்கள் நேரடியாகவும் மறை முகமாக வும் ஆப்பிள் விவசாயத்துடனும் அதனுடன் இணைந்த வியாபாரத்துடனும் சம்பந்தப்பட்டி ருக்கிறார்கள்.
வடக்குக் காஷ்மீரைச் சேர்ந்த சோப்பூர் தெற்குப் பகுதியைச் சேர்ந்த ஷோபியான் ஆகிய இடங்களில்தான் அதிக வியா பாரம் நடைபெறுகிறது. ஸ்ரீநகரிலிருந்து ஷோபியானுக்குச் செல்லும் பயண வழிகளில் காய்த்துக் குலுங்கும் ஆப்பிள் தோட்டங்களின் காட்சிகளை யாரும் இழக்க முடி யாது. அவ்வளவு செழிப்பாகவும், ஆப்பிள் சிவப்பின் அழகோடும் காணப்படும். ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சமயத்தில்தான் ஆப்பிள் காய்க்கும். விரைவில் விளைச்சல் எடுக்கலாம். இது விழாக் காலம் என்பதால் தேவைப்படுவோர் ஆப்பிள் வாங்குவதற்குக் கூடுவார்கள். ஆனால், பந்த் என்றோ, கடை யடைப்பு என்றோ வந்துவிட்டால் அறுவடை யும் விற்பனையும் செய்யமுடியாத நெருக்கடி விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்பட்டு விடும். புல்வாமாவிலும் ஷோபியானிலும் பாது காப்பு அதிகாரிகளும் தீவிரவாதிகளும் ஒரே மாதிரி விவசாயிகளையும் தொழிலாளர் களையும் அச்சுறுத்திய ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதற்கும் ஒருபடி மேலேபோய், விவசாய நிலங்களுக்குச் சென்ற விவசாயிகளின் மீதும் தொழிலாளர்களின் மீதும் தீவிரவாதிகள் துப்பா க்கியால் சுட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் 7 அன்று டங்கர்போரா பகுதியைச் சேர்ந்த ஸோப்பேரியில் இது நடந்தது. தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஆப்பிள் தோட்ட உரிமையாளர் அப்துல் ஹமீத் ராவுத்தரின் மகன் அர்ஷித், பேரன் உஸ்மா ஜான், மற்றும் இரண்டு தொழிலாளர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டு இப்போதும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரு கிறார்கள். ஆப்பிள் வியாபாரிகள்தான் தீவிரவாதி களுக்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள் என்று பாதுகாப்புப் படையினர் குற்றம்சாட்டு கிறார்களென்றால், பொருளாதார ரீதியாகப் பலன் தருகிற எந்த வேலையும் செய்யக்கூடாது என்று வியாபாரிகளைத் தீவிரவாதிகள் மிரட்டு கிறார்கள். இதன் விளைவாக, காஷ்மீர் பொரு ளாதாரத்தின் முதுகெலும்பு என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிற ஆப்பிள் விவசாயமும் வியா பாரமும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
தி.வரதராசன்