tamilnadu

img

கொரோனா: தமிழகத்தில் 6,300 பேர் உயிரிழப்பர்....

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலமையைவிட மோசமானால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் 6,300 பேர் உயிரிழக்கநேரிடுமென இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி)நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.நாட்டில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும். இவர்களில் கர்நாடகத்தில் மட்டும் 71,300 பேர் சிகிச்சையில் இருப்பார்கள். இப்போது தொடரும் நிலையைவிட முன்னேற்றம் காணப்பட்டால் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேர்கொரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.4.5 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 88 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையைவிட மோசமாக மாறினால்,  நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்தால், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6.30 லட்சம், தில்லியில் 2.40 லட்சம், தமிழகத்தில் 1.60 லட்சம், குஜராத்தில் 1.80 லட்சம் அதிகரிக்கலாம்.நவம்பர் 1-ஆம் தேதிக்குள் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 7.20 லட்சமாக அதிகரிக்கும், 30,400 பேர் உயிரிழக்க நேரிடும். 2021-ஆம்ஆண்டு ஜனவரிக்குள் 10.80 லட்சம் பேர் பாதிக்கப்படலாம், அதில் 78,900 பேர் உயிரிழக்க நேரிடும். உயிரிழப்பைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதத்துக்குள் 1.40 லட்சமாக அதிகரிக்கலாம். இதில் மகாராஷ்டிராவில் 25 ஆயிரம் பேர், தில்லியில் 9,700 , கர்நாடகாவில் 8,500, தமிழகத்தில் 6,300,குஜராத்தில் 7,300 பேர் உயிரிழக்க நேரிடலாம்.

வயிற்றில் வளரும் சிசுவையும் பாதிக்கும்
சிசுவையும் கொரோனா தாக்கும் வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பெரும்பாலான வைரஸ்கள் நஞ்சுக்கொடி மூலம் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்குச் சென்றுகருவை பாதிக்கின்றன. அதேபோல், கொரோனாவைரஸ் கர்ப்பிணிப் பெண்கள் மூலம் அவர்களின்கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பாதிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.இத்தாலியில் கொரோனா பாதித்த 31 கர்ப்பிணிப் பெண்கள் கடந்த மார்ச், ஏப்ரலில் குழந்தை பெற்றுள்ளனர். அவர்களின் தொப்புள்கொடி ரத்தம், நஞ்சுக்கொடி, தாய்ப்பாலில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழந்தைக்கு மட்டும் தொப்புள் கொடிரத்தம், நஞ்சுக் கொடியில் வைரஸ் காணப்பட்டது. மற்றொரு குழந்தைக்கு எதிர்ப்பு ஆற்றல் இருந்ததால், வைரசால் நஞ்சுக்கொடியை கடந்து செல்ல முடியவில்லை.

பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வில், கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும் என்பதுஉறுதியாகி உள்ளது.  கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தை பிறப்பிலேயே மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. இதுவரை, கர்ப்பத்தின், கடைசி காலத்தில் வைரஸ் பாதித்த பெண்களிடம் தான் அதிகளவில் ஆய்வுகள் நடந்துள்ளன. அதனால், கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் கொரோனா பாதித்த பெண்களிடம் அதிக ஆய்வுகள் செய்ய வேண்டும். என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.கொரோனா இந்தியாவிலும் உலகின் பிறபகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்  நோயைக் கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சித்த போதிலும், 640 மாவட்டங்களில் 627  மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா (1,15,650 (33%), தில்லி (50,278 (14%), தமிழ்நாடு (47,366 (13%), குஜராத் (25,577 (5%), இராஜஸ்தான் (16,799 (7%), உத்தரப்பிரதேசம் (14,229 (4%), மேற்கு வங்காளம் (12,127 (3%), மற்றும் மத்தியப் பிரதேசம் (10,751(3%). இந்த எட்டு மாநிலங்களில், ஐந்து மாநிலங்களில் அதிக ஒட்டுமொத்த பாதிப்பு (0. 771 முதல்1.000 வரை) உள்ளது.பீகார், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய ஒன்பது பெரிய மாநிலங்களில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் குறைந்தளவே பாதிப்பு உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னைக்குஅடுத்து மதுரை உள்ளதுதான் அதிர்ச்சியான தகவல். 10-ஆம் தேதி 192, 11-ஆம் தேதி 277,12-ஆம் தேதி 319, 13-ஆம் தேதி 464, 14-ஆம்தேதி 450, 15-ஆம் தேதி 341, 16-ஆம் தேதி 267பேர். 17-ஆம் தேதி 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

;