தேசியப் புலனாய்வு முகமைக்கு (NIA) கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்தை இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI, CPM), உவைசின் AIMIM, தேசிய காங்கிரஸ் (NC), முஸ்லிம் லீக் ஆகியன மட்டுமே எதிர்த்துள்ளன. வாக்கெடுக்கும்போது வெறும் 6 வாக்குகள் மட்டுமே இந்தத் திருத்தத்திற்கு எதிராக விழுந்துள்ளன.
எதிர்த்து வாக்களித்தவர்கள் : சுப்பராயன் (CPI), பி.ஆர். நடராஜன் மற்றும் அப்துல் மஜீத் ஆரிஃப் (CPM), ஹுசைனன் மசூதி (NC), சையத் ஜலீல் மற்றும் அசாதுதீன் உவைசி (AIMIM) ஆகியோர் மட்டுமே. முஸ்லிம் லீக் எதிர்த்துப் பேசி வெளிநடப்புச் செய்துள்ளது.
தமிழக எம்.பி க்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4 உறுப்பினர்கள் இருந்தும் இருவர் மட்டுமே வாக்களித்துள்ளனர் (மற்ற இருவரும் அவையில் இல்லை என நினைக்கிறேன்).
NIA அத்துமீறியும், வெளிப்படையான சார்புடனும் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அமித்ஷாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள தமிழக கட்சிகளுக்கு நன்றி... நன்றி.. நன்றி... இதற்கு ஏதாவது நம் தத்துவ வித்தகர்கள் விளக்கம் அளித்துப் பக்கம் பக்கமாக எழுதுவார்கள் என நம்புகிறேன்.
மிக்க பொறுப்புடன் செயல்பட்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வாழ்த்துக்கள்
Marx Anthonisamy