tamilnadu

img

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

புதுதில்லி, செப்.29- விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகை யில் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெங்காயம் அதிகம் விளை யும் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத், பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநி லங்களில் கனமழையால் வெங் காய விளைச்சல் பாதிக்கப்பட் டது. இதனால் வெங்காய வரத்து கணிசமாகக் குறைந்து விலை அதிகரிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் ஒரு கிலோ வெங் காயம் 60 ரூபாய் தொடங்கி 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 3 நாட்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கக் கூடிய ஆந்திர வெங்கா யம் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெங்காயத் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகை யில் மத்திய வர்த்தக அமைச்சகம் அனைத்து வகையான வெங் காய ஏற்றுமதிக்கும் தடை விதிப் பதாக அறிவித்துள்ளது. ஏற்று மதிக்கான தடை உடனடியாக அம லுக்கு வருவதாகவும், மறு உத்த ரவு வரும் வரை தடை அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

;