tamilnadu

img

இஸ்லாமிய மக்களின் ஈகைப் பெருநாள் விழா

இஸ்லாமிய மக்களின் ஈகைப் பெருநாள் விழா திங்களன்று கொண்டாடப்பட்டது. ஆனால் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீர், மத்திய பாஜக அரசின் அராஜகமான முடிவுகளால் பாதுகாப்புப் படையினரின் முற்றுகையில் இருப்பதால் அங்கு பக்ரீத் களை இழந்தது. அது மட்டுமல்ல, தில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் படிக்கவும் வேலை செய்யவும் வந்திருக்கும் காஷ்மீரி மக்கள், ஈகை பண்டிகையையொட்டி, தங்களது பெற்றோரைக் காண செல்ல முடியவில்லை.  அவர்களுடன் தொடர்புகொள்ளவும் முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தில்லியில் படிக்கும் காஷ்மீரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவும், ஆறுதலும் தெரிவிக்கும் பொருட்டும் அவர்களோடு நாங்களும் உறவினர்களே என்று கூறி பக்ரீத் பண்டிகையன்று அவர்களோடு இருக்கும் விதமாகவும் ஜந்தர் மந்தரில் பல்வேறு சமூக அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஈகைப் பெருநாள் நிகழ்ச்சியில் ஏராளமான காஷ்மீரி மாணவர்கள், இளைஞர்கள், தில்லியில் வேலை செய்யும் காஷ்மீரிகள் பங்கேற்றனர். அவர்களில் ஒரு பெண், சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் கதறி அழுத துயரம் இது.