tamilnadu

img

சாதி ஒழிப்பு போராளிகள் தஞ்சையில் சங்கமம்

பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்பு

தஞ்சாவூர் ஆக.17- தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாட்டின் நிறைவாக தஞ்சையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு பேரணி நடைபெற்றது. சனிக் கிழமை அன்று மாலை, கரந்தை அரசுப் போக்குவரத்து கழக பணிமனை அரு கில் இருந்து சாதி ஒழிப்பு பேரணி, வாண வேடிக்கைகள் முழங்க, தப்பாட்டத்து டன், உற்சாகமாகத் தொடங்கியது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில சிறப்புத் தலை வர் பி.சம்பத், மாநில பொதுச் செயலா ளர் கே.சாமுவேல் ராஜ், மாநிலத் தலை வர் த.செல்லக்கண்ணு, மாநில பொரு ளாளர் மோகனா, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன் னணி நிர்வாகிகள் சின்னை.பாண்டி யன், கே.அபிமன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் கோ.நீலமேகம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் டி.ரவீந்திரன், வாலி பர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம், மாதர்சங்கம், மாண வர் சங்கம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கம், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், சிஐடியு, போக்கு வரத்து, தமிழக மக்கள் விடுதலை இயக் கம் மற்றும் தோழமை இயக்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

பொதுக்கூட்டம்

பேரணியைத் தொடர்ந்து தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில சிறப்புத் தலை வர் பி.சம்பத் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சின்னை. பாண்டியன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், மாநி லத் தலைவர் த.செல்லக்கண்ணு, மாநி லப் பொருளாளர் இ.மோகனா, ஆதித் தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன் ஆகியோர் பேசினர்.  கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ. நீலமேகம், மாதர்சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில பொதுச்செயலா ளர் பெ.சண்முகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர்கள் எஸ்.கே.மகேந்திரன், எம்.சின்னத்துரை, துணைப் பொதுச் செயலாளர்கள் யு.கே. சிவஞானம், கே.சாமிநாதன், மு.கந்த சாமி, மாநிலச் செயலாளர் டி.செந்தில் குமார் மற்றும் மாவட்டத் தலைவர் கே. அபிமன்னன், சிபிஎம் மாநகரச் செயலா ளர் என்.குருசாமி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். நிறைவாக வரவேற்புக் குழு பொருளாளர் ஆர்.புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டின் நிறைவாக தஞ்சையில் சாதி ஒழிப்பு பேரணி நடைபெற்றது. சு.வெங்கடேசன் எம்.பி. துவக்கி வைத்தார்.

பேரணியின் நிறைவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலளார் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.