tamilnadu

img

கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவுக்கு பலி...  

திருப்பதி 
நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான திருப்பதியில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அர்ச்சர்கர்கள், தேவஸ்தான ஊழியர்கள், ஜீயர்கள் என இதுவரை 154 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்திற்கு சொந்தமான கேப்டன் தொலைக்காட்சியின் திருப்பதி பகுதி செய்தியாளராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.  கடந்த ஒருவாரகாலமாக கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (ஞாயிறு) உயிரிழந்தார்.   

;