தில்லி இந்திரா காந்தி சர்வ தேச விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள கழிவறையில் பை ஒன்று கிடந்ததை கவனித்த பயணிகள், சி.ஐ.எஸ்.எப் அதிகாரி களிடம் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து கழிவறையில் கிடந்த பையை தீவிர சோதனையிட்டனர். பையில் வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, பையை திறந்து பார்த்த போது அதில் தங்க கட்டி கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் என அதிகாரிகள் தெரி வித்தனர். சுங்கத்துறை அதிகாரி களிடம் தங்க கட்டிகள் ஒப்படைக் கப்பட்டன. இதுகுறித்து போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண் டுள்ளனர்.