tamilnadu

ராஜீவ் காந்தி கொலை: ஆன்டன் பாலசிங்கம் கூறியது என்ன? நார்வே முன்னாள் சமாதான தூதர் பதிவு

ஜிஎஸ்டி பங்குத்தொகை வழங்காமல், கடன் வாங்கவும் நிபந்தனை விதிக்கும் மத்திய அரசின் அராஜகம்  - சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை,ஆக.28- மாநில அரசுகளை திவாலாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி கவுன்சில்

சரக்கு மற்றும் சேவை வரிகள் மன்றத் தின் கூட்டம் புதுதில்லியில் மத்திய நிதி யமைச்சர் தலைமையில் நடைபெற்றுள் ளது. இக்கூட்டத்தில் கொரோனா தொற்று  மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட நிதிபற்றாக் குறையை மாநிலங்கள் ஈடுசெய்வது குறித்து மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திட்டங்கள் மாநில அரசுகளை திவால் நிலைக்கு தள் ளும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

மாநிலங்களுக்குரிய  பங்கு தர மறுப்பதா?

ஜிஎஸ்டி வரி இந்தியா முழுவதும் 2017ம் ஆண்டு முதல் அமல்படுத்தப் பட்டது. இதனால் மாநிலங்கள் தங்கள் சொந்த தேவைக்கு சுயேச்சையாக வரி விதிப்பு செய்யும் அதிகாரம் முழுவதும் பறிக்கப்பட்டுவிட்டது. பேரிடர் நிவாரணத்திற்காக கூட மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே மாநில அரசாங்கம் நிதி திரட்ட முடியும். இதனால் மாநில அரசுகள் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை ஏற்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 2017ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு  ஈடு செய்வதற்கான சட்டமும் ஏற்படுத்தப் பட்டது.  ஆனால், மத்திய அரசு மாநிலங் களுக்கான ஜிஎஸ்டி பங்கைக் கொடுக்க மறுப்பதோடு தற்போது கொரோனா கால த்தில் அதிக வருவாய் இழப்பு ஏற்பட்டு ள்ள நிலையில் மாநிலங்களுக்கு உதவி செய்ய முடியாது என மறுத்துள்ளது.

ரூ.4000 கோடி எங்கே?

ஆனால், 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து மாநில அரசு ஜிஎஸ்டி பங்கைக்கூட பல மாநிலங்களுக்கு முழுமையாக மத்திய அரசாங்கம் வழங்காத நிலை உள்ளது. 2017-18ம் ஆண்டு மாநில அரசுக்கு வர  வேண்டிய ஐஜிஎஸ்டி தொகை ரூபாய் 4000 கோடி இன்று வரையில் மத்திய அர சால் வழங்கப்படவில்லை. இதுதவிர 15வது நிதிக்குழு வருவாய்ப் பற்றாக் குறையை ஈடுகட்டுவதற்காக வெவ்வேறு  மாநிலங்களுக்கு மொத்தமாக வழங்க பரிந்துரை செய்த தொகை  ரூ.74000 கோடி. ஆனால், மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள தொகை வெறும் ரூபாய் 30000 கோடி மட்டுமே. அதாவது தமிழக அரசுக்கு வர வேண்டிய வருவாய் பற்றாக்குறை மானி யம் ரூபாய் 4000 கோடியில் ரூபாய் 1600 கோடி மட்டுமே கிடைக்கவாய்ப்புள்ளது. அதையும் கூட மத்திய அரசு இன்றுவரை முழுமையாக கொடுக்கவில்லை. 

கடன் வாங்கவும் வழியில்லை

மத்திய அரசின் இந்த போக்கின் காரணமாக மாநில அரசுகள் கடும் நிதி பற்றாக்குறையிலும், சுமையிலும் சிக்கி யுள்ளன. தமிழக அரசின் சொந்த வரி வரு வாய் குறைந்துள்ள நிலையில் இந்த காலத்தில் கொரோனா பாதிப்பை எதிர் கொள்வதற்காக மருத்துவ செலவுகள், பொருளாதார உதவிகள், மருத்துவ கட்ட மைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட அனைத்திற்கும் மாநில அரசுகளே செல வழித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு போதுமான நிதி இல்லாததால் பல்வேறு மாநில அரசாங்கங்களும் சந்தையில் கடன் வாங்கியிருக்கின்றன. கடன் வாங்கும் அளவை அதிகரிப்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் தான் ரிசர்வ் வங்கி கடனளிக்கும் என்கிற  நிர்ப்பந்தத்தையும் மத்திய அரசு திணித்துள்ளது.  இதனால் மாநில அரசுகள் அதிக வட்டிக்கு வெளிச்சந்தையில் கடன் வாங்கி கொண்டிருக்கிறார்கள். கடைசியாக கிடைத்த தகவலின் படி தமிழக அரசு மட்டும் ரூபாய் 37500 கோடி வெளிச்சந்தை யில் கடன் வாங்கியுள்ளது. இவ்வளவு நெருக்கடியில் நின்று கொண்டு கொ ரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான போராட்டத்திலும் ஈடுபடும்போது, மத்திய அரசு ஜிஎஸ்டி நிவாரணத்தொகையை தர முடியாது என கைவிரித்திருப்பது சட்டவிரோதமான செயலாகும்.

தற்போது இது கடவுளின் செயலால் ஏற்பட்டது என்று நிதியமைச்சர் சொன்னா லும் இந்த ஆண்டு பட்ஜெட் உரை யின் போதே நிதியமைச்சர் இதை குறிப் பிட்டிருக்கிறார். எனவே, மாநிலங்களை ஓட்டாண்டிகளாக்கி அன்றாட செலவு களுக்கே மத்திய அரசிடம் கையேந்த வைக்கும் நிலைக்கே தள்ளுவதுதான் மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது. தற்போது ஜிஎஸ்டி இழப்பீட்டை தர முடி யாது ரிசர்வ் வங்கியில் வட்டிக்கு கடன் பெற்றுகொள்ளலாம் என நிதியமைச்சர் கூறியிருப்பது சட்டத்தை மீறிய செயல் மட்டுன்றி மாநில மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும். அப்படி ஏதாவது கடன் வாங்க வேண்டுமென்றால் அதை செய்ய வேண்டியது மத்திய அரசே தவிர, மாநில அரசுகள் அல்ல. சட்டவிரோதம் தான் இயற்றிய ஒரு சட்டத்தையே மத்திய அரசு கடவுளின் பெயரை சொல்லி மீறுவது அரசமைப்பு சட்டத்திற்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும். மத்திய அரசின் இந்த சட்டவிரோத போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது.

மத்திய அரசு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கும், பெரும் செல்வந்தர் களுக்கும் பல லட்சம் கோடி ரூபாய் வரி மற்றும் கடன் தள்ளுபடி செய்து வருகிறது. இப்போதும் லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு தனியாருக்கு தாரை  வார்க்க முனைந்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய அரசு மாநிலங் களுக்கு நிதி தர மறுப்பதும், ரிசர்வ் வங்கி அல்லது வெளி மார்க்கெட்டில் வட்டிக்கு கடன் வாங்கிக்கொள்ளலாம் என கூறுவதும் மாநிலஅரசுகளின் செயல்களை முடக்கி கட்டிப்போடுவ தாகும். 

செல்வ வரி

பேரிடர் காலத்தில் அரசின் வருவா யைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளை மத்திய அரசு மேற் கொள்ள முடியும். உதாரணமாக, பெரும் செல்வம் படைத்தோர் மீது ஒரு சதமான செல்வ வரி விதித்தால் கூட சில லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக் கும். அதன் மூலம் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் வழங்கி காப்பாற்ற முடியும்.  எனவே, ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கியோ, வேறு வகைகளிலோ மாநி லங்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டியது மத்திய அரசின் சட்டப்படி யான கடமையாகும். மத்திய அரசு அதை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

மாநில அரசு, மத்திய அரசின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக குரல் எழுப்புவதோடு, இதற்கெதிராக போராடு கிற இதர மாநில அரசுகளோடு இணைந்து நின்று மத்திய அரசின் இந்த அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டு மெனவும், அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.