tamilnadu

img

சென்னை வரும் சீனத் தலைவருக்கு உற்சாக வரவேற்புக்கு ஏற்பாடு

சென்னை, அக். 6 சீன ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விமான நிலைய த்தில் பாதுகாப்பு பலப்படுத்த ப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் வருகிற 11-ந்தேதி அரசு முறைப் பயணமாக சென்னை வரு கிறார். அவரை மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசு கிறார். அப்போது சீனா - இந்தியா நல்லுறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தா கின்றன. சீன ஜனாபதி வருகையை யொட்டி சென்னை விமான நிலை யம் மற்றும் அவர் செல்லும் பாதை, மகாபலிபுரம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 11ஆம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் போது விமான நிலையத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் விமான ஓடுதளத்தில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர் விமானம் வந்து இறங்கும் நேரத்திலும், கலை நிழ்ச்சிகள் நடக்கும் நேரத்திலும் மற்ற பயணிகள் விமானம், சரக்கு விமானங்கள் எதுவும் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வர வேண்டிய மற்றும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்துக்கும் நேரப் பட்டியலை மாற்றி அமைக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது.சீன ஜனாதிபதி விமான நிலையத்தில் இருக்கும் நேரம் முழுவதும் எந்த விமான மும் அங்கிருந்து புறப்பட்டு செல்லவோ, தரை இறங்கவோ அனுமதிக்கப்படாது.

சுவர்களில்  அழகான ஓவியம்

விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே செல்வதற்கு 5-வது மற்றும் 6-வது நுழைவு வாயில் பயன்படுத்தப்பட உள்ளது. அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப் பொலி வுடன் வர்ணம் தீட்டப்படுகிறது. சுவர்களில் ஓவியமும் வரையப்படுகிறது. நுழைவு வாயில் முன் பகுதியில் நீள்வாக்கில் புதிய செயற்கை பூங்கா ஒன்றும் உருவாக்கப்படுகிறது.விமான நிலைய பகுதி மற்றும் பாதையில் எந்தவித போஸ்டரும் ஒட்டக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதை மீறுவோருக்கு ரூ.1000 அபராதம் அல்லது சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டு வரு கின்றன. விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், போதிய வசதிகள் பற்றி ஏற்கனவே சீனாவில் இருந்து அதிகாரிகள் குழு வருகை தந்து ஆய்வு செய்தது. அடுத்ததாக சீன சிறப்பு பாதுகாப்பு படையினர் வர உள்ளனர்.