tamilnadu

img

ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் ஒப்புதல் கார்ப்பரேட் வரிச்சலுகையால் ஒரு நன்மையும் ஏற்படவில்லை!

புதுதில்லி, ஆக.27- தொழில்துறை முன்னேற் றம் என்ற காரணத்தை முன் வைத்து, கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு அறிவிக்கப் பட்ட வரிச் சலுகைகளால் முத லீட்டு சுழற்சி ஏற்படவில்லை என்று ரிசர்வ் வங்கி வருடாந் திர அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதம் கூடுதல் வரிகளுடன் சேர்த்து 25.07 சதவிகிதமாக இருந்தது.  இதனை 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் மோடி அரசு வெகுவாக குறைத்தது.  2019 அக்டோபருக்கு பிறகு தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் 15 சதவிகிதம் மட்டுமே வரியாக செலுத்தி னால் போதும் என்று கூறியது. மற்ற சர் - சார்ஜ்கள் மற்றும் ‘செஸ்’ போன்றவைகளைச் சேர்த்து, 17.01 சதவிகிதம் என்று வரியை நிர்ணயம் செய்தது. தங்களின் கார்ப்பரேட் வரிக்குறைப்பு நடவடிக்கை யால், அந்நிய முதலீடுகள் பெரிய அளவிற்கு இந்தியாவில் கொட்டும்; பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பது மோடி அரசு விளக்கம் அளித்தது. இந்நிலையில்தான், கார்ப்பரேட் வரிக்குறைப்பு செய்யப்பட்டு ஓராண்டு ஆகி விட்ட போதும், எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகளால் முதலீட்டு சுழற்சி ஏற்படவில்லை. நிறுவனங்கள் கடனைக் குறைக்கவும், பண இருப்புகளை உருவாக்கவும் மட்டுமே வரிக்குறைப்பு பயன் பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.