புதுதில்லி, அக்.5- தேர்தல் பத்திரங்கள் திட் டத்தை ரத்து செய்து வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் காரும் மனுக்களை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மறு ஆய்வு மனுக்களை திறந்த நீதி மன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
வெளிப்படைத் தன்மை யற்ற தேர்தல் பத்திரங்கள் முறையிலான நன்கொடை பெறும் முறைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இதனை விசாரித்த உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.பி. பர்தி வாலா, பி.ஆர். கவாய், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், “அநாமதேய தேர் தல் பத்திரங்கள் திட்டமானது, அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-இன் படி குடிமக்களின் தகவல் அறியும் அடிப்படை உரி மையை மீறுவதாக உள்ளது என்பதால், தேர்தல் பத்தி ரங்கள் திட்டத்தை ரத்து செய்கி றோம். மேலும், அநாமதேய தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற் காக, நிறுவனங்கள் சட்டத்தின் 182(1)-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கொள்கை களை மீறுவதாகவும், நிறு வனங்கள் சட்டத்தின் பிரிவு 183(3), வருமான வரிச் சட்டத் தின் பிரிவு 13A(b) ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அரசியல் கட்சிகளுக்கான மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் தின் பிரிவு 29C-ஐ மீறுவதாக வும் உள்ளதால், இந்த சட்டத் திருத்தங்களும் ரத்து செய்யப் படுகின்றன” என்று அதிரடியாக அறிவித்தது.
வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே. நெடும்பரா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், சீராய்வு மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், ஜே.பி. பர்திவாலா மற் றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு சனிக்கிழமை யன்று தள்ளுபடி செய்தது.
“உச்ச நீதிமன்ற விதிகள் 2013ன் XLVII விதி 1-இன் கீழ், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறியிருக்கும் நீதிபதிகள், “மறு ஆய்வு மனுக்களை திறந்த நீதி மன்றத்தில் விசாரிக்க வேண் டும்” என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை.