புதுதில்லியில் இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பில் கையெழுத்து
புதுதில்லி,அக்.5- இந்தியா, வங்கதேசம் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு பெட்ரோலிய எரிவாயு இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தம் சனிக்கிழமையன்று இந்திய-வங்கதேச பிரதமர்கள் சந்திப்பின் போது கையெழுத்தானது. நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந் தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வெள்ளியன்று புதுதில்லி யில் உலக பொருளாதார மன்றத்தின் சார்பில் நடைபெற்ற வர்த்தக மன்றத்தில் கலந்து கொண்டார். பின்னர் சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடு களுக்கும் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து இந்தி யாவுக்கு பெட்ரோலிய எரிவாயு இறக்கு மதி செய்வது உள்ளிட்ட 3 திட்டங்களை பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனாவும் தொடங்கி வைத்தனர். இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கு மான நல்லுறவு அதிகரித்து வருவதாக வும் இந்த நல்லுறவு இருநாட்டு மக்களும் பயனடையும் வகையில் அமைந்துள்ளதாக வும் பிரதமர் மோடி கூறினார். கடந்த ஓராண்டு காலத்தில் இருநாடுகளுக்கு இடையில் 9 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்ட திட்டங்களுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந் துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.