வடகிழக்கு தில்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு தில்லி பகுதியில் கடந்த வாரம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது சிஏஏ ஆதரவு என்ற பெயரில் திரண்டவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடந்த வன்முறையில் பல கடைகள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டது.
பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சால் இந்த வன்முறை வெடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இதுதொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும், காவல் துறையினர் சில இடங்களில் வன்முறைத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) 53 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.