tamilnadu

img

மேலும் 52 பேருக்கு கொரோனா...  புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் கடுமையாகுகிறது... 

புதுச்சேரி
தமிழகத்திற்கு அருகில் உள்ள யூனியன் பிரதேச மாநிலமான புதுச்சேரியில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் இன்னும் பரவல் வேகம் கட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 339 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. அங்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் முதலவர் நாராயணசாமி தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்குள் பொதுமக்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சரியான காரணங்கள், சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன் அனுமதி இல்லாமல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என   அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

;