tamilnadu

img

நித்யானந்தா ஆசிரமத்தின் 2 பெண் மேலாளர்கள் கைது

அகமதாபாத்,நவ.20- குழந்தைகளை கடத்துதல், சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் மற்றும் சித்ரவதை செய்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஹிரா பூர் கிராமத்தில் உள்ள போலிச்சாமியார் நித்யா னந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் மேலாளர்களை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர். பெங்களூரைச் சேர்ந்த  தம்பதி, தங்கள் பெண்  குழந்தைகளை  நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோத மாக அடைத்து வைக்கப் பட்டுள்ளதாக புகார் அளித்த னர். இதையடுத்து ஆசிரமம் மற்றும் மேலாளர்கள் மீது  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆசி ரமத்தின் மேலாளர்கள் மா  பிரன்பிரியா, மா பிரியா தத்வா ஆகியோர் புத னன்று காலை கைது செய்யப்பட்டதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்தனர்.