மகாராஷ்டிராவில் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 17 பேர் மரணம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் தங்கியிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு செல்லும் ஜல்னா பகுதியில் இருந்து புவசால் நோக்கி நடந்து சென்றுள்ளனர்.
ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரயிலும் வராது என்று எண்ணிய தொழிலாளர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அனைவரும் தண்டவாளத்தில் நேற்று இரவு படுத்து உறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் சரக்கு ரெயில் வந்தபோது அவர்கள் கவனித்து எழுவதற்குள் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.