மத்திய அரசு தகவல்
புதுதில்லி, மார்ச் 21- தினந்தோறும் ஒன்றரை கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மருந்துகள், கிருமிநாசினிகள், முகக்கவசங்கள் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் மான்சுக் மண்டாவியா பதிலளிக்கையில், நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மருந்துகள், கிருமிநாசினிகள், முக கவசங்கள் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என்றார். திமுக எம்.பி., பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு ,மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழ்நாட்டில் 4 மீன்பிடி துறைமுகங்களுக்கான பணி நடந்து வருவதாக பதிலளித்தார்.