புதுச்சேரி, மார்ச் 15- புதுச்சேரியில் சர்வதேச பெண்கள் தின கருத்தரங் கம் நடைபெற்றது. கருத்த ரங்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் வி.சந்திரா தலைமை தாங்கி னார். ‘அரசியல் அமைப்புச் சட்டமும், பெண்களின் உரி மைகளும்’ என்ற தலைப்பில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பி.எஸ். அஜித்தா பேசினார். ‘உலக பெண்கள் தினம் 2020’ என்ற தலைப்பில் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமனும், ‘வன்முறை யற்ற வாழ்வை நோக்கி’ என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா ஆகியோரும் கருத்துரை யாற்றினார். மாதர் சங்க புதுச்சேரி பிரதேசச் செயலாளர் சத்தியா, சமம் சுயசார்பு இயக்கத் தலைவர் அன்பரசி ஜெயக்குமார், பொதுச் செயலாளர் மாரிமுத்து, அங்கன் வாடிஊழியர் சங்க நிர்வாகி தாட்சாயினி, உழைக்கும் மகளிர் ஒருங் கிணைப்புக்குழு நிர்வாகி பிரதிபா, உதவும் கரங்கள் அமைப்புத் தலைவர் ஆலிஸ்தாமஸ், முற்போக்கு பெண்கள் அமைப்புத் தலைவர் விஜயா, அசும்தா, கலையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நெல்லித் தோப்பு சுப்பையா சிலை யிலிருந்து பேரணியாக வந்தனர்.