லக்னோ, ஆக. 1 - உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள் ளார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டாக சிறையி லடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி பயணித்த கார் சமீபத்தில் விபத்துக்குள்ளானதில் சிறுமியும், அவரது வழக்கறி ஞரும் படுகாயமுற்று மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். சிறுமியின் உற வினர்கள் 2 பேர் பலியாகினர். இந்த விபத்துக்கு சிறை யிலுள்ள எம்.எல்.ஏ தான் காரணம் என கூறப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், வழக்கு விசார ணையை அடுத்த 7 நாட் களுக்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உத்தரவிட்டார். மேலும் எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீதான வழக்குகளை தில்லிக்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. லக்னோ விலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை, விமானம் மூலம் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவிட்டார். இதனிடையே சிறையிலடை க்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ குல்தீப் செங்காரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் உத்தர விட்டுள்ளது.