புதுச்சேரி,டிச.18- புதுவைச்சேரியின் வளமான மதச்சார் பின்மை, சமூக நல்லிணக்க கலாச்சாரத்திற்கு அவமானம் ஏற்படுத்திய துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை உடனே பதவியி லிருந்து நீக்க வேண்டும், மாநில அரசு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யிருக்கிறது. 400 ஆண்டுகள் பழமையான பாபர் மசூ தியை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இடித்தனர். இந்த வழக்கு தற்போது நடை பெற்று வருகிறது. சமீபத்தில் வழங்கப்பட்ட வேறு ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இதனை சட்டவிரோத செயல் என்று கண்டித்துள்ளது. இந்த சட்டத்திற்கு புறம்பான கலவரத்தை ஏற்படுத்துகின்ற இச்சம்பவத்தை கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஆர்எஸ்எஸ் நடத்தும் ஸ்ரீராம வித்யாகேந்திரா உயர் நிலைப்பள்ளியில் மீண்டும் மசூதி இடிப்பு நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டி கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர். மதவெறியைத் தூண்டும் நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தலைமையேற்று விழாவை நடத்தியுள்ளார் என்பது தெரியவருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் சிறு அசம்பாவிதம் கூட நிகழாத மனித நேயத்துடன், சகோதரத்துவத்தோடும் புதுச்சேரி மக்கள் ஒற்றுமையை பாதுகாத்த னர். அத்தகைய பாரம்பரியமிக்க புதுச்சேரி மாநிலத்தில் மதவெறி பிடித்த கிரண்பேடி ஆளுநராக இருப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். இந்திய அரசியலமைப்பின் படி செயல் படவேண்டிய துணைநிலை ஆளுநர் ஆர்எஸ்எஸ் நடத்தும் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்ற, கலவரத்தை தூண்டுகின்ற நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆளுநரின் இத்தகைய மதவெறி செயல் களை தொடர்ந்து செய்து வருகிறார். தனது ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ்ஸின் பயிற்சி கூடமாகவே நடத்தி வருகிறார். நாடு முழுவதும் புதுச்சேரி அரசின் செலவில் மத வெறி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். ஏற்கனவே பழங்குடி மக்களை திரு டர்கள் என சொன்னது, காட்டை அழித்து பல்வேறு குற்றவழக்குகளில் உள்ள ஜக்கிவாசுதேவ் என்ற போலிச் சாமியாரை அழைத்து நிகழ்ச்சி நடத்துவது என தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கு அவ மானத்தை ஏற்படுத்தி வருகிறார். நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற் கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஆளுநர் ஈடுபடுவதை அனைத்து பகுதி மக்களும் வன்மையாக கண்டிக்க வேண்டும். கிரண்பேடியை மத்திய அரசு உடனே பதவியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும். புதுவை அரசும் ஆளுநர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அறிக்கை ஒன்றில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் இரா.ராஜாங்கம் வலியுறுத்தி யுள்ளார்.