tamilnadu

img

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலில் எஸ்.எஃப்.ஐ தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 201 மாணவர் சங்க தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சங்க தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் கூட்டணியில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.எஃப்) மற்றும் அம்பேத்கர் பெரியார் மாணவர் மன்றம் (ஏ.பி.எஸ்.எஃப்) இருந்தன. இந்த தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.

இதில் மாணவர் சங்க தலைவராக இந்திய மாணவர் சங்கத்தின் பரிச்சய் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை தலைவர்களாக ஏ.ஐ.எஸ்.எஃப் சங்கத்தின் குமார் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மமதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், பொது செயலாளராக ஏ.பி.எஸ்.எஃப் சங்கத்தின் குரலன்பன் மற்றும் கூடுதல் செயலாளராக குரியகோஸ் ஜூனியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகளாக ரூபம் ஹாசரிக்கா, அல் ரிஷல் ஷானவாஸ், சுவேதா வெங்கடேஸ்வரன், அனகா மற்றும் தனவர்தினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.