tamilnadu

img

மோடியே 3-ஆவது குழந்தைதான்.. வாக்குரிமையை பறிக்கலாமா?

ஹைதரபாத்:
‘பதஞ்சலி’ நிறுவனத்தின் முதலாளியும், யோகா சாமியாருமான ராம் தேவ், இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹரித்துவாரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

“இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடிக்கும் அதிகமாக போவதை ஏற்க முடியாது என்றும், இதில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கு, 3-ஆவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை உட்பட எந்த உரிமையும், சலுகையும் வழங்கப்படக் கூடாது” என்று கூறியிருந்தார். இதற்காக மோடி அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இஸ்லாமியர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடாகவே ராம்தேவின் இந்த பேட்டி இருந்தது.இந்நிலையில், ராம்தேவின் பேச்சுக்கு, மஜ்லிஸ் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாசுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார். “பாபா ராம்தேவ், தனது வயிற்றின் மூலம், தனது காலின் மூலம் எளிதாக யோகா செய்யலாம். ஆனால், சட்டம் இயற்றுவது அப்படியல்ல. மூன்றாவது குழந்தை வாக்குரிமை இழக்கும் என்றால், முதலில் பிரதமர் நரேந்திர மோடிதான் வாக்குரிமையை இழக்க வேண்டும்; அதற்குத் தயாரா?” என்று ஓவைசி கேட்டுள்ளார்.