tamilnadu

img

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,253 புதிய தொற்றுகள் பதிவு 

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46,253 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது. இதில், 514 இறப்புகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 253 புதிய கொரோனா தொற்றுகளும், 514 சிறப்புகளும் பதிவாகியுள்ளன. மொத்தமாக இந்தியாவில் 83.13 லட்சம் தொற்றுகளாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களாக 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. மொத்த இறப்புகள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ள தொற்றுகள் 5.5 லட்சத்திற்கும் குறைவாகவும், குணமடைந்தவர்கள் 76.56 சதவிகிதமாக உள்ளது.

செவ்வாயன்று, முதன் முறையாக 6,700 கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. உலகளவில் 47.2 மில்லியன் கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 1.21 மில்லியனாக உள்ளது. விஸ்கான்சின் முதல் வட கரோலினா வரை, மொத்தம் 10 மில்லியன் தொற்றுகளாக அதிகரித்து வருகின்றன. மீண்டும் எழுந்த கொரோனா தொற்று ஐரோப்பாவைத் தொடர்ந்து தாக்குகிறது. ருமேனியா, பல்கேரியா மற்றும் ஹங்கேரி ஆகியவை இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டன. இத்தாலி, சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகியவை புதிய தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா தனது இரு பெரிய நகரங்களுக்கிடையிலான மாநில எல்லையை நவம்பர் 23 ஆம் தேதி மீண்டும் திறப்பதாக முடிவு செய்துள்ளது.