புதுச்சேரி, ஆக. 13- புதுச்சேரியில் கொரோனா தொற்று அதி கரிப்பதால் செவ்வாய்க்கிழமை தோறும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஜூன் மாதம் பொதுமுடக் கத்தில் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு தொற் றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக புதனன்று (ஆக. 12) ஒரே நாளில் 481 பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, வாரந் தோறும் செவ்வாய்க் கிழமைகளில் முழு ஊர டங்கு அமல்படுத்தப்படுகிறது. கடைகள் இயங்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களி டம் கூறியதாவது: புதுச்சேரியில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. தினசரி 1000 பேருக்கு பரி சோதனை செய்து முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
ஜிப்மரில் ஒரு நாளை 1000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அதே போல், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி யில் 600 பேருக்கு பரிசோதனை செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தனி யார் மருத்துவக் கல்லூரியிலும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துமாறு அறி வுறுத்தியுள்ளோம். இதன் மூலம் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையான மருத்துவர்களை, செவிலி யர்களை, ஆஷா பணியாளர்களை, துப்புரவு பணியாளர்களை 4, 5 நாட்களில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ஆர்டி-பிசிஆர் கருவி வாங்குவதற்கும், 10 ஆயிரம் ஆன்டிசென் கருவி வாங்குவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால், மாகே, ஏனாமில் மருத்துவ பரிசோதனை செய்வதற்கான உபகரணங் கள் ஓரிரு நாட்களில் வந்துவிடும். 75 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட கவச உடைகள் உள் ளன. இதனை அதிகப்படுத்தவும், மருந்து கள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள் ளோம். மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாநில வருவாயில் ரூ.700 கோடி துண்டு விழுந்துள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டாக ரூ.560 கோடி கொடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக கடந்த 4 மாதங்க ளில் ரூ.740 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள் ளது. இதனை ஈடு செய்ய வேண்டிய நிலை யில் உள்ளோம். இந்த சூழ்நிலையிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நிவார ணம் வழங்கவும், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாங்கவும், சுகாதார பணி யாளர்களை நியமிக்கவும் மாநில அரசின் நிதியிலிருந்து ரூ.25கோடி ஒதுக்கி யுள்ளோம். மத்திய அரசிடமிருந்து இதுவரை 3 கோடி மட்டும்தான் கொரோன தடுப்பு நிதி யாக கிடைத்துள்ளது. கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த மாநிலத்துக்கு இடைக்காலமாக ரூ.225 கோடி நிதி வழங்க வேண்டும். ஒட்டுமொத்த மாக ரூ.975 கோடி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் பல முறை கடிதம் எழுதியும், காணொலியில் பேசும் போதும் கோரிக்கை வைத்தேன்.
இதுவரை பிரதமர், உள்துறை அமைச்சரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை. புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. ஆனால் அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகத் துக்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவி வழங்குகிறது. ஒருபுறம் மாநில வருவாயை பெருக்க வேண்டும். இன்னொரு புறம் மக்க ளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் அரசு செயல்படுகிறது. முழு பொதுமுடக்கம் புதுச்சேரியில் இப்போது காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்தி ருக்க அனுமதிக்கப்பட்டது. மத்திய அரசு ஊர டங்கை தளர்த்திய பிறகு இந்த உத்தரவு போடப்பட்டது. தற்போது வெள்ளிக்கிழமை (ஆக. 14) முதல் காலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கடைகள் திறக்கவும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வீட்டிற்கு செல்லவும் நேரம் வழங்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது.
அதே போல் செவ்வாய்க்கிழமை முழு மையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்ப டும். காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கடைகள், தொழில் நிறுவனங் கள், வியாபார நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும். புதுவையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும். கொரோனா தொற்று பாதிப்பு குறைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். உயிரிழப்பு 100ஐ கடந்தது புதுச்சேரியில் வியாழனன்று (ஆக.13) புதிதாக 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 6,680ஆக அதிக ரித்துள்ளது. 6 பேர் உயிரிழந்ததையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது. முன்னாள் அமைச்சர் பலி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழு மலை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.