புதுச்சேரி, செப்.3- புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவராக இருந்தவர் வைத்திலிங்கம் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிலிருந்து அப்பதவிக்கு துணை பேரவைத் தலைவராக இருந்த வி.பி. சிவக்கொழுந்து புதிய சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் காலியாக உள்ள துணை பேரவைத் தலைவர் பதவிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை செயலகம் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 5 ஆம் தேதி அதற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ளார். இந்த தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக தான் வகித்து வந்த சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் பதவியை சட்டமன்ற உறுப்பினர் பாலன் ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம் வழங்கினார்.