tamilnadu

img

மருத்துவர்களே கடவுள்: காங்கிரஸ் எம்.எல்.ஏ

 புதுச்சேரி, ஏப்.24- புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மக்களைச் சந்திப்பதாலும், இலவச அரிசி, காய்கறி களை வழங்குவதாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அத்துடன் இந்த பரிசோதனையில் மக்கள் பிரதிநிதிகள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. அதனடிப்படையில் முதல்வர் நாராயணசாமி, பேரவைத்தலைவர் சிவக்கொழுந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஜெயமூர்த்தி, அனந்தரா மன், அதிமுக எம்.எல்.ஏ க்கள் அன்பழகன், பாஸ்கர், பாஜக நியமன எம்.எல்.ஏ க்கள் சாமிநாதன், சங்கர் ஆகியோர் பரிசோதனை செய்துகொண்டனர்.  அவர்களுக்கு ஆர்.டி-பி.சி.ஆர் முறையில் பரிசோதனை செய்யப்பட் டது.

அப்போது அரியாங்குப் பம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏவான n ஜயமூர்த்தி, பரிசோதனை செய்ய வந்திருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கால்களில் விழுந்து வணங்கி பாராட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எம்.எல்.ஏ b ஜயமூர்த்தி கூறுகை யில்,"எனது அரியாங்குப்பம் தொகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகள் முழுமையாக சீல் வைக்கப் பட்டது. அப்போது மருத்துவர்கள் மட்டும்தான் உயிரைப் பணயம் வைத்து அந்தப் பகுதிக்குள் சென்று அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்துவந்தனர். அதேபோல அந்தப் பகுதியில் 24 மணி நேரமும் முகாம் அமைத்து கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தி னரை கவனித்துக் கொண்டார்கள். இதேபோல அர்ப்பணிப்பு உணர்வுடன் தான் பணியாற்றி வருகின்றனர். அவர்கள்தான் கடவுள். அவர்களின் சேவையைப் பாராட்டித்தான் அவர்களின் காலில் விழுந்தேன்” என்றார்.