மதச்சார்பின்மைக்கு எதிராக பாஜக அரசு தாக்கல் செய்துள்ள குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி காலாப்பட்டிலுள்ள மத்திய பல்கலைக் கழக மாணவர் விடுதி அருகே நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில், பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர் சங்க கிளைச் செயலாளர் அபிஜித்சுதாகரன் தலைமை தாங்கினார். மாணவர் பேரவை கழக நிர்வாகிகள் ரூபம்ஹசாரிகா மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் லோகிந்திராகோகே,டேவிட்,அஸ்ரப் உள்ளிட்ட திரளான மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.