tamilnadu

முறைசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை வழங்குக புதுவை அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, அக். 23- புதுச்சேரியில் முறைசாரா தொழி லாளர்களுக்கு தீபாவளி உதவித் தொகை உடனே வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கோரிக்கை விடுத்துள்ளது.  புதுச்சேரி மாநிலத்தில் அன்றாடம் ஏதாவது வேலைசெய்து வாழ்க்கை நடத்துவோரின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. உழைப்பாளி மக்க ளின் இந்த முறைசாரா தொழிலா ளர்கள் 80 விழுக்காடு என்பது மிக வும் கவலைக்குரியது. முறைசாரா  தொழிலாளர்களின் சமூகப்பாது காப்பிற்கு மத்திய மாநில அரசு கள் சட்டம் இயற்றியிருந்தும் இச்சட்டங்கள் இத்தொழிலாளர்க ளின் துயர்துடைக்கவில்லை.  புதுச்சேரி மாநிலத்தை விட பிற  மாநிலங்களில் முறைசாரா தொழிலா ளர்களுக்கான திட்டப்பயன்கள் ஓரளவு நிறைவேற்றப் படுகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் குறைந்த பட்ச திட்டப்பயன்கள் கூட அம லாக்கப்படவில்லை. புதுச்சேரியில் தொழிலாளர்க ளின் தொடர்ச்சியான போராட்டங்க ளின் விளைவாக கட்டிட தொழிலா ளர்களுக்கு வாரியம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், லட்சக்க ணக்கான தொழிலாளர்கள் உள்ள பிற முறைசாரா அமைப்புகளுக்கு வாரியங்களை ஏற்படுத்த புதுச்சேரி அரசு மறுத்து வருகிறது.  பிற மாநிலங்களில் முறைசாரா தொழிலாளர்களுக்கு வேறு வகை யான திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. ஆனால் புதுச்சேரியில் ஒப்புக்காக சிறிய தொகையே வழங்  கப்படுகிறது. உதாரணமாக முறை சாரா தொழிலாளி விபத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் வரை உதவி  செய்யப்படுகிறது. ஆனால் புதுச்சேரி யில் ரூ.75000 மட்டுமே வழங்கப்படு கிறது. பிற திட்ட உதவிகளும் பெயரள விற்கே தரப்படுகிறது. முறைசாரா தொழிலாளர்களை தொடர்ந்து புதுச்சேரி அரசு வஞ்சித்து வரு கிறது. இந்நிலையில் முறைசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி  உதவித் தொகை வழங்கவேண்டு மென சிஐடியு சார்பில் பலகட்டப்  போராட்டங்கள் நடத்தப்பட்டு அனைத்து முறைசாரா தொழிலாளர்க ளுக்கும் 2004 ஆம் அண்டு முதல் புதுவையில் வருடந்தோறும் தீபா வளியையொட்டி கட்டுமான தொழி லாளர் நல வாரிய உறுப்பினர்க ளுக்கும் முறைசாரா தொழிலாளர்க ளுக்கும் கூப்பன் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ரூ. 2000  வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டது ஆனால் அதுவும் வழங்கப் படவில்லை.  இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பரிசுக் கூப்பன்  தொடர்பாக எந்த அறிவிப்பும்  வெளியாகவில்லை.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலா ளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள  நிலையில் ரூ. 5000 என உயர்த்தி அறி வித்து உடனே அனைத்து முறை சாரா, கட்டுமான தொழிலாளர்க ளுக்கும் வழங்க வேண்டும். அப்படி  வழங்காவிடில், அமைப்புசாரா தொழிலாளர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்று  அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கி றார்.