tamilnadu

img

புதுச்சேரியில் ஜனவரி 31 வரை இரவு நேர ஊரடங்கு அமல்  

புதுச்சேரியில் ஜனவரி 31 வரை இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி அம்மாநில அரசு இன்று(வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.  

கொரோனா தொற்றின் புதிய உருமாறிய ஒமிக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஒமிக்ரான் தொற்று முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பின்னர் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.  இந்த நிலையில் புதுச்சேரியிலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி முழுவதும் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதேசி அன்று மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை டிசம்பர் 31 நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும். இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இன்று(டிசம்பர் 31) மற்றும் நாளை(ஜனவரி 1) மட்டும் இரவு 12.30 மணிவரை பொது இடங்களில் மக்கள் கூட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட்டங்கள் நடைபெற அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

;