tamilnadu

img

மண்ணில் லட்டு செய்து மோடிக்கு அனுப்பிய மாதர் சங்கம்....

தீபாவளி பண்டிகையையொட்டி அத்தியாவசியப் பொருட்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நவ.5 வியாழனன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு மண்ணில் லட்டு செய்து அனுப்பும் போராட்டம் உட்பட பல்வேறு வடிவங்களில் நூதனப் போராட்டத்தை நடத்தியது. புதுச்சேரியில் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், விருதுநகரில் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி உள்பட மாநில, மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.