புதுக்கோட்டை, மார்ச் 27-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் சுரேஷ் (34). இவர், மலேசியாவில் தங்கி பணிபுரிந்து வந்தார். ஜன.15-ஆம் தேதி நாடு திரும்பிய இவர், திருப்பூரில் தங்கியிருந்துவிட்டு மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது, இவர்களுக்கான மற்றொரு வீட்டில் தனிமையில் இருந்து வந்தார். வெளிநாடு சென்று ஒரு ஆண்டிலேயே திரும்பியதோடு, வீட்டிலும் தனிமையில் இருந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அறந்தாங்கி காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.