புதுக்கோட்டை ஜூலை 31- அரசுப் பள்ளி மாணவ, மாணவி களுக்கு கடந்த ஆண்டு மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலை யில் தற்போது மாணவ, மாணவி களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2017-18 ஆம் கல்வி ஆண்டில் ப்ளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி கொடுக்காமல் தற்போது ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவ, மாணவி களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மாண வர்கள் அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று கேட்கும் போது மடிக்கணினி வரவில்லை என்று கூறப்படுவதால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்களில் மாணவர்கள் ஈடு பட்டுள்ளனர். இந்நிலையில் கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்க ளுக்கும் மடிக்கணினி வழங்க வேண் டும் என்பதை வலியுறுத்தி கொத்த மங்கலம் கடைவீதியில் செவ்வாய்க் கிழமை சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடமும் பெற்றோர்களிடம் சமாதானம் பேசி னார்கள். விரைவில் அனைத்து மாணவிகளுக்கும் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்கள். இதன்பின் மாணவிகள் மறியலை கைவிட்டு சென்றனர்.