tamilnadu

img

மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 30 கி.மீ. தரமான சாலை

புதுக்கோட்டை, செப்.16- 21,184 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சுமார் 30 கி.மீட்டர் தூரத்தி ற்கு தரமான சாலைகள் அமைக்க மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வழிவகை செய்துள் ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளது: 2016 முதல் நடப்பு நிதியாண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு  23,657 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7.32 கோடி  மதிப்பீட்டில் சுயதொழிலுக்காக மானியத்து டன் வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், சமுதாய மூலதன நிதியுதவித் திட்டத்தின் கீழ் 2017 முதல் நடப்பு  நிதி யாண்டு வரை 2,280 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.9.84 கோடி மதிப்பீட்டில் சுயதொழில் புரிவதற்கு மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.17.16 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வங்கி கடன் பெற்று 21,184 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை இயந்திரம் மூலம் மறுசுழற்சி செய்து திருமயம், பொன்னம ராவதி, அறந்தாங்கி, குன்றாண்டார்கோ வில், விராலிமலை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றி யங்களில்  சுமார் 30 கி.மீட்டர் தூரத்திற்கு தரமான சாலைகள் அமைக்க வழிவகை செய்துள்ளனர். ஒரு முறை மட்டும் பயன் படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை சுற்றுச்சூழ லுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இதுபோன்று ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துவது பாராட்டத்தக்கது.  மேலும், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை வர்த்தக நிறுவனங்க ளுக்கு அதிகளவில் தைத்து வழங்கு கின்றனர்.  இத்தகைய பணி சுற்றுச்சூழ லுக்கும், சமுதாயத்திற்கும்  பயனளிக்க கூடிய வகையில் அமைந்துள்ளது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அரசின் இதுபோன்ற திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.