tamilnadu

பறிமுதல் வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு

 பொன்னமராவதி, மே 24- காவல்துறையால் பல்வேறு வழக்கு களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங் களை பொதுமக்களுக்கு இடையூறின்றி நிறுத்தி வைக்க வேண்டுமென சிபிஎம் கோரியுள்ளது. சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என். பக்ருதீன், ஒன்றிய குழு உறுப்பினர் ஏ. சவுந்தரராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொன்னமராவதி அருகே உள்ள காரை யூர் காவல் நிலையத்தில் கொரோனா விதி மீறல் வாகனங்கள் மற்றும் மணல் கடத்தல் வாகனங்கள், போக்குவரத்து விதிமீறல் வாகனங்களை காரையூர் காவல்துறை யினர் பறிமுதல் செய்து காவல் நிலை யத்தில் வைத்துள்ளனர்.  மேலும் அங்கு போதிய இடவசதி இல்லாததால் சாலையோரம் மற்றும் அங்கன்வாடி மையத்தின் முன்பு அந்த வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வாகனங்களால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது. எனவே காவல்துறை பறிமுதல் செய்த வாக னங்களை நிறுத்தி வைப்பதற்கு மாற்று இடத்தினை தேர்வு செய்ய வேண்டும் என சிபிஎம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.