tamilnadu

img

பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 பொன்னமராவதி, ஆக.31- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் தேவேந்திரன் தலைமை வகித்தார். பொன்.தமிழரசன், சின்னு.பழகு, செந்தில்குமார், பொன்.சேது ராமன், ரமேஷ், சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் திலிபன் ராஜா, மாநில பொறுப்பாளர்கள் மு.கா.ஷாஜகான், தெ.கலைமுரசு சிறப்புரையாற்றினர். பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பையும் அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா நகர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவான சாலை அமைத்து தர வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.