tamilnadu

img

சிலட்டூரில் 500 நாட்டு மரங்கள் நடும் பணி அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

அறந்தாங்கி, ஜன.9 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி ஒன்றியம் சிலட்டூர் பகுதி யில் உள்ள பெருமாள்குளம் கரை மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் உள்ளிட்ட பகுதியில் வேம்பு, பூவரசு, அரசமரம் உள்ளிட்ட நாட்டு மரங்களை சுற்றுச்சூழல் மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நட்டு தொடங்கி வைத் தார். ஒரே நேரத்தில் குளக்கரையை சுற்றி, ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நி லைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்கள் என மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் சிலட்டூர் நாட்டுத் தலைவர் தங்கவேல், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி, சண்முக நாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜா, ஊராட்சி மன்ற தலை வர்கள் மணிமொழியன், கருணா நிதி மற்றும் அறந்தாங்கி கோட்டாட்சி யர் சொர்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.