புதுக்கோட்டை, ஆக.1- புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலத்தில் இளைஞர் மன்றத்தினரின் முயற்சியில் உள்ளூர், வெளியூர் தன்னார்வலர்களின் நன்கொடையில் 6 பெரிய குளம், ஏரிகள், மற்றும் அணைக்கட்டு, தண்ணீர் வரத்துவாரி கள் சீரமைப்பு பணி சுமார் 80 நாட்களாக தொடர்ந்து நடக்கிறது. சீரமைக்கப்படும் நீர்நிலைகளில் மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரத்து வாய்க்கால் கள் சீரமைப்பு பணியில் ஆக்கிரமிப்பு கள் அதிகமாக உள்ளதாலும், விழா பொதுமேடையே வரத்து வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ளதாலும் சீரமைப்பு பணி முடங்கியுள்ளது. குளங்கள் சீர மைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த இளை ஞர்கள் நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்பு களை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றிக் கொடுத்தால் இளைஞர் மன்றத்தினரே சொந்த செலவில் சீர மைத்துக் கொள்வதாக கடந்த மாதம் மனு கொடுத்தனர். அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளார். இந்த நிலையில் இதுவரை இளை ஞர்களின் பணிகளை பார்க்க கூட ஒரு அதிகாரியும் வரவில்லை. ஆனால் கடந்த மாதம் ஜல்சக்தி அபியான் திட் டத்திற்கு ஆய்வுக்கு வந்த மத்தியக்குழு வினர் கொத்தமங்கலம் சென்று இளை ஞர்களின் பணியை பார்த்து பாராட்டி னார்கள். அவர்களுடன் வந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆக்கிர மிப்புகளை அகற்றி தண்ணீர் வரத்து வாய்க்கால்களை சீரமைத்துக் கொடுப்பதாக கூறிச் சென்றனர். அதன் பிறகு அதிகாரிகள் வரவில்லை. இந்த நிலையில் மழை பெய்தால் தண்ணீர் வீணாகாமல் இருக்க வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணி யை இளைஞர்கள் தொடங்கியுள்ளனர். மறமடக்கி சாலையில் உள்ள ஒரு வரத்து வாய்க்கால் 3 கி.மீ தூரம் வரை மராமத்து செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் வாடிமாநகர் கடைவீதியில் தடைபட்டுள்ளது. அதாவது வரத்து வாய்க்காலில் விழா பொது மேடை அமைக்கப்பட்டுள்ளதால் அத்துடன் தடைபட்டுள்ளது. அதனால் இளை ஞர்களின் இத்தனை நாள் உழைப்பும் வீணாகிவருவதாக இளைஞர்கள் கூறு கிறார்கள். மேலும், மேடைக்கு அரு கில் மாற்று வழியை காட்டினாலும் வாய்க்கால் அமைக்க தயாராக இருக்கி றோம். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் ஆக்கிர மிப்புகளை அகற்றி தண்ணீரை கொண்டு வந்து நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும் என்றனர்.