tamilnadu

கேந்திர வித்யாலயா பள்ளி தேர்வுத் தாள் கல்வி காவிமயமாவதை உறுதிப்படுத்துகிறது தொல்.திருமாவளவன் எம்.பி., குற்றச்சாட்டு

 புதுக்கோட்டை, செப்.8- இஸ்லாமிய மற்றும் தலித் சமுதாயம் குறித்த கேந்திர வித்யாலயா பள்ளியின் தேர்வு கேள்வித் தாள் கல்வி காவி மயமாகி வருவதை உறுதிப்படுத்துகிறது என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு: அரசியலில் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழிசைக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கி இருக்கலாம். அவருக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலேயே இந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. கேந்திர வித்யாலயா பள்ளி தேர்வில் இஸ்லாமிய மற்றும் தலித் சமுதாயம் குறித்து கேள்வி கேட்டிருக்கும் முறை அதிர்ச்சியை அளிக்கிறது. இது கல்வியை முழுக்க முழுக்க காவிமயமாக்கும் நடவடிக்கையை உறுதிப்படுத்துகிறது. இது போன்று கேள்வித்தாள் தயாரித்தவர்கள் மீது அரசு கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு, அவர் தொழிலில் முதலீடு எவ்வாறு பெற்று உள்ளார் என்ற அறிக்கையை பொறுத்தே அது குறித்து விமர்சனம் செய்ய முடியும். சிதம்பரத்தை போன்று ஸ்டாலி னும் கைது செய்யப்படுவார் என்று பாஜக தலைவர்கள் கூறு வது அவர்களது ஆசை. அந்த ஆசை நிறைவேறாது. இஸ்ரோ விஞ்ஞானிகள் படைத்திருப்பது மிகப்பெரிய சாதனை. சந்திராயன்-2 பின்னடைவுக்காக விஞ்ஞானிகள் கலங்க வேண்டியதில்லை. அவர்களின் தொடர் முயற்சி வெற்றியைத் தேடித் தரும் என்றார்.