tamilnadu

அதிக விபத்து ஏற்படும் இடங்களில் ஆய்வு

பொன்னமராவதி, பிப்.22- பொன்னமராவதி அருகே அதிக விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படும் கீழப்பட்டி வளைவு, வெள்ளை யாண்டிபட்டி விளக்கு ஆகிய இடங்களில் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை மற்றும் பொ ன்னமராவதி காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் நெடுஞ்சா லைத் துறையின் சார்பில் சாலையின் வளைவை சரி  செய்தல், வேகத்தடை அமைத்தல், ஒளிரும் முப்பரி மாண ஸ்டிக்கர், எச்சரிக்கை பலகைகள் வைத்தல்  உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொன்ன மராவதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியா ளர் ரவிச்சந்திரன், பொன்னமராவதி காவல்துறை உதவி  ஆய்வாளர் மாயழகுசுந்தரம், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.