புதுக்கோட்டை, நவ.14- புதுக்கோட்டை மாவட்டம் கீர மங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வையொட்டி பள்ளி ஆசிரியர்கள் 900 மாணவிகளுக்கு தலை வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தனர். நாட்டின் முதல் பிரதமர் ஜவ ஹர்லால் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கடைப்பிடிக் கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிக ளில் கலை நிகழ்ச்சிகள், இலக்கி யப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும், மாணவர்க ளுக்கு இனிப்பு, பூ கொடுத்து வர வேற்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டம் கீர மங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் தினத்தையும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டனர். காலையில் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 900 மாணவி களுக்கும் தலை வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுக்க திட்ட மிட்டனர். ஆசிரியர்கள் சுமார் ரூ.30 ஆயிரம் சொந்தமாக செலவு செய்து சைவப் பிரியாணி தயாரித்து வழங்கி னர். மதியம் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சின்னச்சாமி முன்னிலையில் அனைத்து மாணவிகளையும் பள்ளி வளாகத்தில் அமர வைத்து ஒரே நேரத்தில் வாழை இலையில் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவி களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து உபசரித்தனர். இது குறித்து மாணவிகள் கூறும்போது, எங்கள் ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளாக நினைத்து எங்களை வரவேற்று மதியம் சொந்த செலவில் தலைவாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது என்றனர்.