tamilnadu

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூலை 7- புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறுகையில், பெண் குழந்தை களுக்கு எவ்வித பிரச்சனை ஏற்பட்டாலும் 1098 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். குழந்தை கள் பாதுகாப்பிற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு  செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்மு றைகளை குறைப்பதற்காக ஆலோசனை வழ ங்குவதற்காகவும், உதவி செய்வதற்காகவும் மாவட்ட சமூகநல அலுவலக பாதுகாப்பு அலு வலரின் 6383089492 அலைபேசி எண்ணி லோ, குடும்பநல ஆலோசகரின் 9566306500 அலைபேசி எண்ணிலோ, மைய நிர்வாகியின் 9849891308 அலைபேசி எண்ணிலோ மற்றும் முதுநிலை ஆலோசகரின் 9600622046 அலை பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு ஆலோசனை மற்றும் உதவிகள் பெறலாம்.  பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழ ந்தைகள் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அங்கன்வாடிப் பணியாளர்களின் அலைபேசி எண்களை தொடர்பு கொள்வதற்கு www.icds.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பகுதிக்குட்பட்ட அங்கன்வாடி மைய பணியாளர்களின் அலைபேசி எண்களை பெறலாம்.