மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் குழந்தைகள் ஆதிக்க உயர் சாதியினரால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்டம் தெம்மாகூர் கிராமத்தில் தலித் மக்கள் பேருந்து நிழற்குடைகள் அமர்வதை பொறுத்துக் கொள்ளாத உயர்சாதியினர் நிழற் குடையை சேதம் செய்ததை கண்டித்தும், பஞ்சமி நிலங்கள் அபகரிப்பு, இடுகாடு வழிப்பாதை மறுப்பு, சாதி படுகொலைகளை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர் மாவட்ட குழு சார்பில் மாவட்டத் தலைவர் எம். பி.ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் பா.செல்வன், மாவட்டச் செயலாளர் குபேந்திரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் என் காசிநாதன், எஸ்.பரசுராமன், நகர தொழிற்சங்க கூட்டமைப்பு சி.ஞானசேகரன், எஸ்.ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.