tamilnadu

img

சிஐடியு சிறப்புக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை, டிச.7-  இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் சிறப்புக் கருத்த ரங்கம் புதுக்கோட்டையில் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்றது. கருத்த ரங்கிற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார்.  கருத்தரங்கில், ‘இந்திய தொழிலா ளர் வர்க்கத்தின் ஆபத்தும், அகில இந்திய மாநாடும்’ என்ற தலைப்பில் மாநி லத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்பு ரையாற்றினார். அவரிடம் பல்வேறு துறை சங்கங்களின் சார்பில் அகில இந்திய மாநாட்டுக்கான நிதியளிக்கப் பட்டது. ‘இந்திய வரலாற்றில் தொழிலா ளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் மாநில செயலாளர் எம்.ஐடாஹெலன், ‘மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியும், தொழிலாளர் நிலையும்’ என்ற தலைப் பில் மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகி யோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ப.சண்முகம், எஸ்.பாலசுப்பிரமணியன், சி.அன்புமணவாளன், சி.மாரிக்கண்ணு, கே.சிவக்குமார், எஸ்.தேவமணி, எஸ். யாசிந்த், செ.பிச்சைமுத்து, எஸ்.ஆறு முகம், கு.நடராஜன், ஏ.திரவியராஜ், ஏ.தீன், டி.சந்தானம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கு.செல்வ ராஜ் நன்றி கூறினார்.