அறந்தாங்கி, மார்ச் - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை அடுத்த பெரு நாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் ஆவுடையார்கோவில் தனி தாசில்தார் பி.சூரியபிரபு தலைமையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கம் மற்றும் எஸ்.எஸ்-அகா டமி இணைந்து கல்லூரி மூன்றாம் ஆண்டு இளங் கலை மாணவ, மாணவிகள் மற்றும் முதுகலை இரண் டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புக்கான வழிகாட்டு தல் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் தலைமை ஏற்று பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பி வேல்முருகன், அறந்தாங்கி வருவாய் அலுவலர் கவாவி பேகம், எஸ்.எஸ்எஸ். அகாடமி இயக்குநர் எஸ்.சுரேஷ் பேசி னர். போட்டி தேர்வில் வெற்றி பெற்று கிராம நிர்வாக அலுவலராக தேர்ச்சி பெற்ற அனிதா என்ற மாணவி தான் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற அனுபவத்தை மாணவ, மாணவிகளிடம் விளக்கினார். பேராசிரியர் ஜீவரெத்தினம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கணினி அறிவி யல் துறை பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். நிறைவாக வணிக வியல் துறைத் தலைவர் என்.கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.